இங்கிலாந்து உலக்கிண்ண மைதானத்தில் காதலை சொன்ன இளைஞன்.!!

உலகக்கிண்ணம் போட்டியின் இடையே மைதானத்தில் வைத்து தன்னுடைய காதலியிடம் இளைஞர் காதலை கூறும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ணம் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி டக்வத் லூயிஸ் விதிப்படி, 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி துடுப்பாட்டம் செய்து கொண்டிருந்த போது, அன்விதா என்கிற இளம்பெண்ணின் காதலர், தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

சற்றும் எதிர்பாராத அந்த இளம்பெண் சிரித்தபடியே அவருடைய காதலை ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் அவர்களை வாழ்த்தியுள்ளனர்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.