மன்னாா் பேசாலை கடற்பகுதியில் கைவிடப்பட்ட படகிலிருந்து கேரள கஞ்சா பொதி மீட்பு!!📷

மன்னாா் பேசாலை கடற்பகுதியில் கைவிடப்பட்ட ரோலா் படகிலிருந்து 140 கிலோ 760 கிராம் நிறையுடைய கேரள கஞ்சா பொதிகளை இலங்கை கடற்படையினா் நேற்று கைப்பற்றியுள்ளனா்.

கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த டோலர் படகொன்றிலிருந்து குறித்த கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.பேசாலை கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே குறித்த டோலர் படகில் இருந்து கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும், குறித்த படகிலிருந்த சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக என தமிழ் அருள் மன்னார் மாவட்ட செய்தியாளரிடம் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரளக்கஞ்சாவையும் டோலர் படகையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.