ஒலுமடுவில் விபத்தானவர் சிகிச்சை பலனின்றி உயிாிழப்பு.!!

மாங்குளம்- ஒலுமடு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிாிழந்துள்ளதுடன், மேலும் ஒரு இளைஞன் படுகாயமடைந்துள்ளான்.


மாங்குளத்திலிருந்து முள்ளியவளை நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்ற இருவர் ஒலுமடு பகுதியில் உள்ள வீதி வளைவில் திரும்ப முற்பட்ட வேளை மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் 17ஆம் கட்டை நெடுங்கேணியை சேர்ந்த காத்தலிங்கம் துஷ்யன் (வயது 27) என்ற இளைஞரே படுகாயமடைந்த நிலையில்

மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு முள்ளியவளை பகுதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை பாஸ்கரன் (வயது 57) என்பவரே காயமடைந்த நிலையில் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு

 மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் .சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.