வெலிக்கந்த வாகன விபத்தில் பலியானவர்களின் பூதவுடல்களுக்கு இறுதி அஞ்சலி!!📷

பொலன்னறுவை, மட்டக்களப்பு வீதியில் வெலிக்கந்த பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியானவர்களின் பூதவுடல்கள் வைக்கப்பட்டுள்ள வெலிக்கந்த போஅத்த பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு இன்று (21) பிற்பகல் சென்ற ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பூதவுடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

இந்த வாகன விபத்தில் பலியான அனைவரின் சார்பிலும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் பிரதேச மக்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.
மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றவர்கள் தொடர்பிலும் அவர்களது குடும்ப விபரங்கள் பற்றியும் கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள், விபத்திற்குள்ளான அனைவரினதும் குடும்பங்களின் நலன்பேணல் மற்றும் பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.