வவுனியா கோமரசங்குளத்தில் வீதியில் கொள்ளை!!

வவுனியா கோமரசங்குளத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மீது நேற்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) 7.30 மணியளவில் இனந்தெரியாத இருவர் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.


கோமரசங்குளத்திலிருந்து மகாறம்பைக்குளம் நோக்கி குறித்த பெண் தனது கணவர் மற்றும் பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் கோமரசங்குளம் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் பின்பகுதியிலிருந்த பெண் மீது தடியினால் தாக்குதல் மேற்கொண்டு விட்டு அவரது கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியினை அறுக்க முற்பட்டுள்ளனர்.

இதன் போது கணவன் காப்பாற்றுமாறு கத்தியுள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்காரணமாக குறித்த பகுதியில் சிறிது நேரம் பதற்றமான நிலை ஏற்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் பொதுமக்கள் மற்றும் கணவரின் உதவியுடன் காயமடைந்த பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

32 வயதுடைய லி.யாழினி என்ற பெண்ணே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.