அமெரிக்கா விரோதத்துடனே உள்ளது – வடகொரியா!!

அணு ஆயுத பயன்பாடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சமீபத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டும் கூட, விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்துடனே அமெரிக்கா உள்ளதாக வட கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.


வடகொரியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும் என்ற எண்ணம் இன்னும் அமெரிக்காவுக்கு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான வடகொரிய தூதர் தெரிவித்துள்ளார்.

இருநாட்டு தலைவர்களும் சமீபத்தில் சந்தித்த வரலாற்று நிகழ்வு நடந்த சில நாட்களுக்கு பின்னர் இந்த குற்றச்சாட்டுகள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வட கொரியா மற்றும் தென் கொரியாவின் எல்லையிலிருக்கும் இராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னை சில தினங்களுக்கு முன்பு சந்தித்தார்.

இதன் மூலம் பதவியில் இருக்கும்போது வடகொரிய மண்ணில் காலடி வைத்த முதல் அதிபர் என்ற பெருமையை ட்ரம்ப் பெற்றார். இரு தலைவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை ஒரு மணிநேரத்திற்கு மேலாக இடம்பெற்றது.

இந்நிலையில் அமெரிக்காவை குற்றஞ்சாட்டும் வகையில் வடகொரியாவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.