தலைவர்கள் மக்களால் உருவாக்கப்பட வேண்டும் – சி.வி!!.

தலைவர்கள் மரபுவழித் தலைவர்களாக இல்லாமல் மக்களால் உருவாக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


அரசியல் உரிமைகள், அதிகாரங்கள் என்பன அடிமட்டத்திலிருந்து மேல் நோக்கி வளர்ச்சி பெறும்போதே உண்மையான தலைவர்களை, மக்களுக்காக உழைக்கக் கூடிய தலைவர்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பொதுமக்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “அரசியல் தலைவர்கள் எனப்படுபவர்கள் யார்? மக்களால் அரசுக்கு செலுத்தப்பட்ட வரிப்பணங்கள் அனைத்தும் மக்களுக்கே முறையாக செலவிடப்படுகின்றதா என்பதை கண்காணிப்பதற்கும் மேலதிக பணத்தை வேண்டுமெனில் மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கும், மக்களின் தேவைகளைத் தேடிக்கொடுப்பது பற்றி ஒழுங்குபடுத்துவதற்குமாக மக்களால் தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்படுபவர்களே அவர்கள். ஆனால் இன்று என்ன நடக்கின்றது?

எந்த ஒரு அரசியல்வாதியும் தனது சொந்தப்பணத்தில் மக்களுக்கு நன்மை பெற்றுத்தந்துள்ளார்களா என்பதை நீங்கள் பரீட்சித்துப் பார்க்க வேண்டும். அரசாங்கம் தரும் பணத்தை தம் சொந்தப் பணம் போல காண்பித்து எவ்வாறு அவர்கள் அரசியல் இலாபம் பெற முயற்சிக்கின்றார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

இனிவரும் காலங்களிலாவது முறையான தன்னலமற்ற மக்கள் தொண்டர்களாக உழைக்கக்கூடிய தலைவர்களை உருவாக்க நீங்கள் முன்வர வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.