மொனராகல வனப்பகுதியில் தீ - திணறும் தீயணைப்புப் பிரிவு!!

மொனராகலை – மரகலகந்த வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயால் பெருமளவான வனப்பகுதி பாதிப்படைந்துள்ளதாக மொனராகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


நேற்று மாலை பரவியுள்ள தீயைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரும் , இராணுவத்தினரும் ஈடுபட்ட போதிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வரை தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

தீயணைப்பு பணிக்கு விமானப் படையின் பெல்-212 ரக உலங்கு வானூர்தியும் பயன்படுத்தப்பட்டது.

இதனிடையே, தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.