கிளிநொச்சியில் மாணவர்களால் சுற்றாடல் விழிப்புணர்வு செயற்திட்டம்!
சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இன்று(திங்கட்கிழமை) காலை 7 மணிமுதல் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
‘நாமே போட்டோம் நாமே சேகரிப்போம்’ எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் சுற்றாடல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை வளாகம் மற்றும் கிளிநொச்சி நகரின் ஏ9 வீதியின் டிப்போ சந்தி முதல் கரடிபோக்கு சந்தி வரையாக இரு மருங்கிலும் உள்ள உக்காத பொருட்கள் இதன்போது பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டது. சுமார் 1 மணிநேரம் குறித்த செயற்திட்டம் பாடசாலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக மாணவர்கள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் சுற்றாடல் பாதுகாப்ப தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிடப்படுகின்றது.
சுற்றாடல் பாதுகாப்பு, பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைகளை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கிளிநொச்சி மகாவித்தியாலய சாரணிய மாணவர்கள் மற்றும் பெண் சாரணியர்கள் 120 பேரினது பங்களிப்புடன் இன்று இவ்வாறான செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டமையானது மக்கள் மத்தியில் வழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
இன்று(திங்கட்கிழமை) காலை 7 மணிமுதல் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
‘நாமே போட்டோம் நாமே சேகரிப்போம்’ எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் சுற்றாடல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை வளாகம் மற்றும் கிளிநொச்சி நகரின் ஏ9 வீதியின் டிப்போ சந்தி முதல் கரடிபோக்கு சந்தி வரையாக இரு மருங்கிலும் உள்ள உக்காத பொருட்கள் இதன்போது பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டது. சுமார் 1 மணிநேரம் குறித்த செயற்திட்டம் பாடசாலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக மாணவர்கள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் சுற்றாடல் பாதுகாப்ப தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிடப்படுகின்றது.
சுற்றாடல் பாதுகாப்பு, பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைகளை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கிளிநொச்சி மகாவித்தியாலய சாரணிய மாணவர்கள் மற்றும் பெண் சாரணியர்கள் 120 பேரினது பங்களிப்புடன் இன்று இவ்வாறான செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டமையானது மக்கள் மத்தியில் வழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை