14 இந்திய பிரஜைகள் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்றினால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ள நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் பன்னிரண்டு பேரின் சுற்றுலா விசா காலாவதியாகியுள்ளதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 21 மற்றும் 43 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் மிரிஹானை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நாடு கடத்த தேவையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.