கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகு எரிப்பு!!

மன்னார்-பேசாலை கடற்கரையில் தற்காலிக கொட்டிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி இலைப் படகு கொட்டிலுடன் தீ வைத்து ஏரியூட்டப்பட்டுள்ளது.


கடந்த மூன்று மாதங்களாக பேசாலை 7ஆம் வட்டார பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பேசாலை கடற்கரையில் படகை நிறுத்தி கடற்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு ஒரு தொகுதி வலைகளுடன் குறித்த கண்ணாடி இலைப் படகு, கடற்கரையில் உள்ள தற்காலிக கொட்டிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்போது, குறித்த கொட்டில் மற்றும் கண்ணாடி இலை படகு என்பன திடீரென தீப்பற்றி எரிந்துள்ளன.

இதனையடுத்து தீயினை அணைக்க அயலவர்கள் முற்பட்டுள்ளனர். எனினும் குறித்த கண்ணாடி இலை படகு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக படகின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டிற்கு அமைய மேலதிக விசாரனைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.