தகவல்கள் திருட்டு – பேஸ்புக்கிற்கு அபராதம்!

சமுக வலைத்தளங்களுக்கான விதிகளை மீறி, பயனாளர்களின் இரகசிய தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா எனும் அரசியல் ஆலோசனை நிறுவனத்துக்கு பேஸ்புக் பயனாளர்களின் இரகசிய தகவல்களை திருடிக் கொடுத்ததாக பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதற்கு பதிலளித்த பேஸ்புக் நிறுவனம், ‘பயனாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் நிறுவனம் திருடியது உண்மைதான். இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்’ குறிப்பிட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த முறைப்பாடு குறித்து அமெரிக்க வர்த்தக ஆணையகம் கடந்த மார்ச் மாதம் விசாரணைகளை ஆரம்பித்தது.

இந்த விசாரணையில், கடந்த 2011ம் ஆண்டு மேற்கொண்ட, தனிப்பட்ட நபர்களின் தகவல்களை கசிய விடுவதில்லை எனும் உடன்பாட்டுக்கு எதிராக பேஸ்புக் நிறுவனம் செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நிறுவனத்துக்கு சுமார் 3 இலட்சத்து 42 ஆயிரம் கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.