மைத்திரிக்கு விடுக்கப்பட்டுள்ள 45 நாட்கள் கெடு!!
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இன்னமும் 45 நாட்கள் கால அவகாசம் மாத்திரமே உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் மாத பிற்பகுதியில் தேர்தல்கள் ஆணைக்குழு அந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிடத் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஜனவரி 9ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதிக்கும் டிசம்பர் 9ஆம் திகதிக்கும் இடையில் ஒரு சனிக்கிழமை அன்று நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருகின்றது.
இதற்கமைய ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவைக் கோரும் வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழுவே வெளியிடும்.
பதவியில் உள்ள ஜனாதிபதியின், பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை ஆணைக்குழுத் தலைவரே வெளியிடுவார்.
பதவியில் உள்ள ஜனாதிபதி தனது பதவிக்காலத்தின் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்த பின்னர், மீண்டும் மக்கள் ஆணையைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்தால், அவர் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
அதற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் மாத பிற்பகுதியில் தேர்தல்கள் ஆணைக்குழு அந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிடத் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஜனவரி 9ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதிக்கும் டிசம்பர் 9ஆம் திகதிக்கும் இடையில் ஒரு சனிக்கிழமை அன்று நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருகின்றது.
இதற்கமைய ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவைக் கோரும் வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழுவே வெளியிடும்.
பதவியில் உள்ள ஜனாதிபதியின், பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை ஆணைக்குழுத் தலைவரே வெளியிடுவார்.
பதவியில் உள்ள ஜனாதிபதி தனது பதவிக்காலத்தின் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்த பின்னர், மீண்டும் மக்கள் ஆணையைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்தால், அவர் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை