சொத்து விபரத்தை பகிரங்கப்படுத்தினார் ஹர்ஷ டி சில்வா!

2018/19 ஆம் ஆண்டிற்கான தனது சொத்து விபரத்தை அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வா பகிரங்கப்படுத்தியுள்ளார் என இலங்கையின் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.


இந்த நடவடிக்கையானது மிகவும் திறந்த மற்றும் பொறுப்புணர்வுள்ள ஜனநாயகத்தை நிறுவுவதற்கான ஒரு முக்கியமான படியாகும் என அந்த அமைப்பின் நிர்வாக இயக்குனர் அசோக ஒபேசேகர முன்பு கூறியிருந்தார்.

ஹர்ஷ டி சில்வா தனது சொத்து விபரத்தை பகிரங்கப்படுத்திய எட்டாவது நாடாளுமன்ற உறுப்பினராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் தாரக பாலசூரிய, வாசுதேவ நாணயக்கார, அலிசாஹிர் மௌலானா, எம்.ஏ. சுமந்திரன், விதுர விக்ரமரத்ன, இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன மற்றும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் பகிரங்கப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.