இராணுவச் சிப்பாயாக பணிபுரியும் தமிழ்ப்பெண் மீது தாக்குதல்!!

வவுனியா ஓமந்தை புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் தமிழ் பெண் இராணுவச்சிப்பாய் ஒருவரின் வீடு புகுந்து அவரை வாளால் வெட்டியுள்ளார் பக்கத்து வீட்டுக்காரர்.


தாக்குதலை தடுக்கச் சென்ற, பெண் இராணுவத்தின் சகோதரனும் வெட்டிக்காயத்திற்கு இலக்கானார். படுகாயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு ஓமந்தை புதியவேலர்சின்னக்குளம் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

இராணுவத்தில் பணிபுரிய கூடாது அல்லது இராணுவத்தில் பணிபுரிவதானால் இங்கு இருக்கவேண்டாம் என்று தெரிவித்தே அப்பெண் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதன் போது வெட்டு காயத்திற்குள்ளான பெண் இராணுவச்சிப்பாயை காப்பாற்றுவதற்காக ஓடிச் சென்ற சகோதரன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சகோதரியும் , சகோதரனும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெட்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.