பிரான்சிலிருந்து தாயகம் வந்த தமிழ் குடும்பம்பம் கைது!!

பிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கடந்த திங்கட்கிழமை (08.07.2019) கைது செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த கட்டுநாயக்க செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்த நிலையில் மனைவி விசேட குற்றப்புலனாய்வு பிரிவின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கணவர் முதலில் பிடித்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் நான்கு பிள்ளைகள் மற்றும் தகப்பன் விமான நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

எனினும் எதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும் மனைவி எதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற காரணங்கள் தெரியவில்லை.

அதன் பின்னர் மனைவியும் பினையின் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.