விசாரணையை ஆரம்பிக்காவிட்டால் போராட்டம்- பிக்குகள் எச்சரிக்கை!!

ரஞ்சன் ராமநாயக்க மீது இரண்டு நாட்களிற்குள் விசாரணையை ஆரம்பிக்காவிட்டால் முற்றுகை போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பௌத்த பிக்குகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


பொலிஸ் தலைமையகத்திற்கு இன்று சென்ற சிங்கள தேசிய அமைப்பு, சிங்கள ராவய அமைப்பின் பௌத்த பிக்குகளே இதனை தெரிவித்துள்ளனர்.

ரஞ்சன் ராமநாயக்க பௌத்த பிக்குகளை தரக்குறைவாக விமர்சித்து வருவதாக தெரிவித்த பிக்குகள், இதனால் இளம்பிள்ளைகளை துறவிகளாக்க பெற்றோர் தயக்கம் காட்ட ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்மீதான விசாரணைகளிற்கு இரண்டு வாரங்கள் பொறுக்க முடியாது, என்றும் இரண்டு நாளில் விசாரணை ஆரம்பிக்க வேண்டும் எனவும் பிக்குகள் கூறியுள்ளனர்.
அவ்வாறு இல்லையேல், பொலிஸ் தலைமையகம், சிறிகோத்தா, ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் பிக்குகள் எச்சரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.