கஞ்சிபானை இம்ரான் வழக்கு நீதிமன்றில்!!

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகத் தலைவரான கஞ்சிபானை இம்ரான் தொடர்பாக பொலிஸார் நீதிமன்றுக்கு முன்வைத்துள்ள முதல் ‘பி’ அறிக்கை தொடர்பாக விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை சட்ட விரோதமானது என, இம்ரானின் சட்டத்தரணி முன்வைத்துள்ள விடயங்கள் குறித்தே மன்றுக்கு விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் இன்று (புதன்கிழமை) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அந்தவகையில், சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபரான கஞ்சிபானை இம்ரான் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி டிரந்த வலியத்த முன்வைத்த வாதங்களை ஏற்றே கொழும்பு மேலதிக நீதிவான், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.