கன்னியாய் விவகாரத்திற்கு ஆதரவாக வவுனியாவில் போராட்டம்!!

கன்னியாவில், பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த விகாரை கட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


இன்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட இப்போராட்டத்தில், கன்னியாவில் பெரும்பான்மையினர் செயற்பட்ட விதத்திற்கும் கடுமையான எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டன.

கன்னியா வென்னீரூற்றுப் பகுதியில் பிள்ளையார் ஆலய வளாகத்தில் புத்த விகாரை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று திருகோணமலையில் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டம் நீதிமன்ற உத்தரவின் கீழ் நிறுத்தப்பட்டது.

இதன்போது, சில பெரும்பான்மையினத்தவர்களினால் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வருகைத் தந்திருந்தவர்கள் மீது தேநீர்த் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கடுமையான வார்த்தைகளால் நிந்தித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினால் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில், இலங்கையில் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு, திருகோணமலைக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த சிவமோகம், ஸ்ரீதரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதன்போது கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன.

எதிர்ப்பு வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் உறவுகள் ஈடுபட்டிருந்தனர்.

879ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தாம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கொட்டகைகக்கு முன்பாகவே இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.