இந்தத் தேசம் பௌத்த போதையின் உச்சக்கட்டத்தை நெருங்குகின்றது.!!

பிக்குமார்களை விமர்சித்தால் ICCPR என்கிற சர்வதேச சட்டம் பாயுமென மிரட்டுகிறார்கள். இச்சட்டம் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு நிகரானது எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. அதன்படி சக்திக போன்ற எழுத்தாளர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சட்டங்களால் பாதுகாக்கப்படும் பிக்குமாரின் செயல்கள் அநாகரிகமாக, மனித இனமே வெட்கித் தலைகுனியும் வண்ணமாக அமைகிறது எனப் புதியதொரு பதிவை எழுதத் தொடங்கும்போதே, செய்தி வருகிறது, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் கட்டப்பட்ட நந்திக்கொடிகளை பௌத்த பிக்கு அறுத்தெறிந்துவிட்டாராம். மலையகத்தில் தமிழர்களின் கிராமிய வழிபாட்டு தெய்வக் கோயிலுக்கு சென்ற பிக்கு ஒருவர் பௌத்த கொடியை ஏற்றி மக்களுடன் முரண்பாடுகளில் ஈடுபட்டராம்.
இந்தத் தேசம் பௌத்த போதையின் உச்சக்கட்டத்தை நெருங்குகின்றது. சிறுபான்மையினர் வாழவே முடியாத சுடுகாடாக மாறிவருகிறது.

-ஜெரா தம்பி-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.