வடக்கு கிழக்குக்கான இரவு ரயில் சேவைகள் இரத்து!!

இன்று இரவு 8 ரயில் சேவைகளை இரத்து செய்யவுள்ளதாக புகையிரத சேவைகள் திணைக்களம் தெரவித்துள்ளது.


பொல்ஹாவெலை – பொத்தஹரை இடையிலான வீதியில் மேற்கொள்ளப்டும் திருத்தப்பணி காரணமாக அவ்வழியூடான சேவை மட்டுப்படுத்தவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை, மட்டக்களப்பு, தலைமன்னார் மற்றும் திருகோணமலை நோக்கிப் புறப்பட இருந்த நான்கு ரயில்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் காங்கேசன்துறை, மட்டக்களப்பு, தலைமன்னார் மற்றும் திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்க இருந்த நான்கு ரயில்களும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.