ஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை!!

துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று (ஜூலை 21) மாலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.


சட்டமன்ற மானியக் கூட்டத் தொடர் கடந்த ஜூன் 28ஆம் தேதி தொடங்கி நேற்றுவரை நடைபெற்றது. கடைசி நாளான நேற்று வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கை மீது துணை முதல்வர் பன்னீர்செல்வம் பதிலுரை வழங்கினார். இன்னும் சில நாட்களில் வேலூர் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கவுள்ள சூழலில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவசர பயணமாக இன்று மாலை 6.55 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இது தனிப்பட்ட பயணம் என்றே கூறப்படுகிறது.

பன்னீர்செல்வம் டெல்லி செல்வதன் பின்னணி குறித்து விசாரித்தோம். “பன்னீர்செல்வம் சிகிச்சை மேற்கொள்வதற்காக விரைவில் வெளிநாட்டுக்கு செல்ல இருக்கிறார். டெல்லியில் அது சம்பந்தப்பட்ட பணிகளையும் கவனித்து வர இருக்கிறார்” என்கிறார்கள். ஏற்கனவே முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த பன்னீர்செல்வம், கோவையிலுள்ள மருத்துவமனையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.