புகையிரத்தில் மோதுண்டு இளைஞன் உயிரிழப்பு!!

வவுனியா- மூன்றுமுறிப்பு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், கல்கமுவ பகுதியைச் சேர்ந்த மதுஷான் திலிந்த ஜெயவீர என்ற 25வயதுடைய  இளைஞனே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் வவுனியாவிலிருந்து கொழும்பு சென்ற புகையிரதத்துடன் மோதி உயிரிழந்திருக்கலாம் அல்லது புகையிரதக்கடவையில் படுத்துறங்கியிருந்தபோது இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் சடலம், புகையிரதக்கடவைக்கு அருகே காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் அதன் அருகில்  சில்லறைக்காசு, தீப்பெட்டி என்பனவும்  கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் விபத்தா? அல்லது தற்கொலையா? போன்ற விடயங்கள் தெரியவராத நிலையில்  மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை வவுனியா மூன்றுமுறிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள தனியார் பேருந்துகள் தரிப்பிடத்தில் பேருந்துகளை சுத்தம் செய்யும் பணியில் இந்த இளைஞன் ஈடுபட்டு வந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.