அவிசாவளை நபர்கள் கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்டனர்!!

கிளிநொச்சியில் உள்ள மண்டகல் ஆறு பகுதியில் நேற்று கடற்படை நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிலர் கைது செய்யப்பட்டு, சோதனையிட்டபோது அவர்கள் புதையல் அகழ்வில் ஈடுபட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.


புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

புதையல் அகழ்விற்கு பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டது.

அவிசாவளை பகுதியை சேர்ந்தவர்களே புதையல் அகழ்வில் ஈடுபட்டிருந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 29, 34, 35, 47 மற்றும் 48 வயதுடையவர்களாவர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.