நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன்!
இராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் இரண்டாவது வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை டிசம்பர் 2 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக உயர் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற கலைப்பு தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த, நீதிபதிகள் குழுவின் அமர்வு தொடர்பாக, சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளான தலைமை நீதிபதியரசர் ஜயந்த ஜெயசூரிய, நீதிபதிகள் எல்.டி.பி. தெல்தெனிய மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோர் மீது அவர் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இன்றைய விசாரணையின்போது, குறித்த அறிக்கை எந்த வகையிலும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை சிரமத்திற்குள்ளாக்கியிருந்தால், ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ் முஸ்தபா தெரிவித்தார்.
இது தொடர்பாக பரிசீலனை செய்த நீதிபதிகள் கொண்ட அமர்வு, வழக்கை டிசம்பர் 2 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
அத்தோடு குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை டிசம்பர் 2 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக உயர் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற கலைப்பு தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த, நீதிபதிகள் குழுவின் அமர்வு தொடர்பாக, சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளான தலைமை நீதிபதியரசர் ஜயந்த ஜெயசூரிய, நீதிபதிகள் எல்.டி.பி. தெல்தெனிய மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோர் மீது அவர் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இன்றைய விசாரணையின்போது, குறித்த அறிக்கை எந்த வகையிலும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை சிரமத்திற்குள்ளாக்கியிருந்தால், ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ் முஸ்தபா தெரிவித்தார்.
இது தொடர்பாக பரிசீலனை செய்த நீதிபதிகள் கொண்ட அமர்வு, வழக்கை டிசம்பர் 2 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை