கன்னியாவில் ஆடி அமாவாசை வழிபாடு!

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று சிவாலயத்தில் ஆடி அமாவாசை விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.


பிதிர்க்கடன் நிறைவேற்றுவதற்காக இன்று (புதன்கிழமை) அடியார்கள் பலர் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதன்பின்னர் பிதிர்க்கடன் நிறைவேற்றியவர்கள் அந்தணர்களுக்கு தானம் வழங்கினர்.

மேலும் பௌத்த துறவிகள் சிவன் ஆலயத்திற்கு வருகை தந்து சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன், ஆலய நிர்வாக சபையினரிடம் கருத்துப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டனர்.

கன்னியா பிள்ளையார் கோயில் விவகாரம் அண்மைக்காலமாக அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் சிங்கள மக்கள் சிலரினால் தமிழ் இந்துக்கள் கன்னியா பிள்ளையார்  மற்றும் சிவன் ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அச்சுறத்தல் விடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், ஆடி அமாவாசையன்று கன்னியா வெந்நீரூற்று சிவன் ஆலயத்தில் இந்து பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதை தடுக்ககூடாது என திருகோணமலை மேல் நீதிமன்றத்தால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எந்தவித இடையூறுகளுமின்றி வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.

இதேவேளை கன்னியா வெந்நீரூற்று சிவன் ஆலயத்திற்கு அருகிலுள்ள விகாரையிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் பௌத்தர்களால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.