நல்லாட்சிக்கு காலக்கெடு விதித்த தேரர்!
அமைச்சர் ரிசாட் பதியுதீன் தொடர்பாக எதுவித நடவடிக்கையையும் எடுக்காத கூட்டுஅரசாங்கம் 7 நாள்களில் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர் ரிசாட் பதியுதீன் தீவிரவாதி களுடன் கடந்த காலங்களில் எவ்வாறான தொடர்புகளில் இருந்தார் என்பதற்கான பல்வேறு தகவல்களை நாம் வெளியிட்டிருந்தோம்.
அத்துடன் ரிக்ஷாட் காணிகளை வழங்கியது, அரச வாகனங்களை க்ஷஹ்ரான் உள்ளிட்ட தரப்பினருக்கு வழங்கியது என்பன தொடர்பான தகவல்களை நாம் ஆதாரத்துடன் வழங்கியிருந்தோம்.
எனினும், இதனைஅரசாங்கம் மூடிமறைத்து, மீண்டும் அவருக்கு ஒரு மாதத்தில் அமைச்சுப் பதவியை வழங்கியுள்ளது.
இச்செயலானது மக்களின் ஆணையையும் மனசாட்சியையும் ஜனநாயகத்தையும் மீறும் ஒரு செயற்பாடாகும் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்ட இந்த அரசாங்கத்தை வெளியேற்ற, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், எதிர்வரும் 7 நாள்களில்அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வெளியேறவேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
நேற்றுமுன்தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர் ரிசாட் பதியுதீன் தீவிரவாதி களுடன் கடந்த காலங்களில் எவ்வாறான தொடர்புகளில் இருந்தார் என்பதற்கான பல்வேறு தகவல்களை நாம் வெளியிட்டிருந்தோம்.
அத்துடன் ரிக்ஷாட் காணிகளை வழங்கியது, அரச வாகனங்களை க்ஷஹ்ரான் உள்ளிட்ட தரப்பினருக்கு வழங்கியது என்பன தொடர்பான தகவல்களை நாம் ஆதாரத்துடன் வழங்கியிருந்தோம்.
எனினும், இதனைஅரசாங்கம் மூடிமறைத்து, மீண்டும் அவருக்கு ஒரு மாதத்தில் அமைச்சுப் பதவியை வழங்கியுள்ளது.
இச்செயலானது மக்களின் ஆணையையும் மனசாட்சியையும் ஜனநாயகத்தையும் மீறும் ஒரு செயற்பாடாகும் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்ட இந்த அரசாங்கத்தை வெளியேற்ற, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், எதிர்வரும் 7 நாள்களில்அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வெளியேறவேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை