பொம்மை துப்பாக்கியால் பறிபோன சிறுமியின் உயிர்! 📷

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று 17வயது சிறுமி போலீசாரால் சுடப்பட்டார். காவல்துறையின் வாகனத்தின் மீது மோதவிட்டு சென்றதாகவும் போலீஸாரை நோக்கி துப்பாக்கியை காட்டியதால் சிறுமி சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிறுமி பயன்படுத்தியது பொம்மை துப்பாக்கி என்றும் காவலர்களின் கவனக்குறைவால் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த வீடியோ பதிவில் வாகனம் மோதியதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால் சிறுமி காவலர்களை நோக்கி துப்பாக்கியை காட்டுவது காவலர்கள் சுடுவதும் பதிவாகியுள்ளது. இரண்டு முறை காவலர்களால் சுடப்பட்டு தரையில் வீழ்ந்துவிட்டார். அதன்பின்னர் காவலர்கள் சிறுமியை தரையில் கிடத்தி கைவிலங்கு பூட்டுகின்றனர்.
சிசிடிவி கேமரா காட்சி
சிசிடிவி கேமரா காட்சி
அப்போது காவலர்களிடம், `என்னால் மூச்சு விட முடியவில்லை.. தயவுசெய்து என்னை காப்பாற்றுங்கள்.. என்னால் சுவாசிக்க முடியவில்லை காப்பாற்றுங்கள்’ எனக் கதறுகிறாள். உடனடியாக காவல்துறையினர் சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர். எங்கே குண்டு அடிபட்டது எனக் கேட்கவே, இடது கால் மற்றும் மார்பு பகுதிகளில் குண்டு தாக்கியதாகக் கூறுகிறாள் அந்த சிறுமி. அங்கு சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கின்றனர். அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்துவிட்டார்.
இந்த வீடியோ விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். தன்னை காப்பாற்றுங்கள் மூச்சுவிட முடியவில்லை எனக் கூறும்போது கைவிலங்கு பூட்டுவது சரியா என சிறுமியின் உறவினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் அளித்த விளக்கத்தில், அத்தகைய சூழ்நிலையில் குறிப்பிட்ட நபருக்கு கைவிலங்கிடுவது வழக்கமான நடைமுறை தான் எனத் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி
துப்பாக்கி
சிறுமி சுடப்பட்டு 90 நிமிடங்களுக்கு பிறகு காவல்கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் இருக்கும் நபர், தனது மகள் எங்களது அனுமதியின்றி காரை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுவிட்டாள். அவள் உடல்நலம் பாதிக்கப்பட்டவள் மருந்து உட்கொண்டு வருகிறாள் என தெரிவித்துள்ளார். சிறுமி அடையாளங்களை கூறியுள்ளார். அதன் பின்னர் தான் தனது மகள் காவலர்களால் சுடப்பட்ட செய்தி சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.