நீராவியடி பிள்ளையார் பொங்கல் நிகழ்வை தடுக்க பொலிஸ் குழப்பம் விளைவிப்பு!📷

நீராவியடி பிள்ளையார் பொங்கல் நிகழ்வை பொலிஸ் குழப்ப முற்படுத்துவதாக விசனம்  மக்கள் தெரிவித்தனர்.


முல்லைத்தீவு – செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று 108 பானைகளில் பொங்கல் பொங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதிகாலையில் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு பண்டம் எடுத்து வரும் நிகழ்வு ஆரம்பித்தது. சற்று முன்னர் நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு பண்டம் எடுத்து வரப்பட்டு, அபிசேகம் இடம்பெற்று வருகிறது.
பொங்கலுக்காக அடுப்புகளை ஒழுங்கமைப்பு செய்யும் போது, அடுப்புகளை பிக்கு அத்து மீறி குடியிருக்கும் கட்டடத்தை அண்மித்து வைக்க வேண்டாம் என்று பொலிஸார் தடையிட்டுள்ளனர்.
அடுப்புகளை கோவிலுக்கு வெளியே வீதியில் வைத்து பொங்குமாறும் பொலிஸார் மக்களிடம் தெரிவித்துள்ளனர். பொங்கல் நிகழ்வைக் குழப்பும் விதமாகப் பொலிஸார் செயற்படுவதாக அடியவர்கள் மிகுந்த வேதனையோடு தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.