தோனியை பாதுகாக்க வேண்டும்: கிளார்க்!!
உலகக் கோப்பை தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையுடன் விளையாடவுள்ளது.
அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள இந்திய அணி இனி ஆடும் ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியமானது. பந்துவீச்சில் பும்ரா, ஷமி சிறந்து விளங்கும் நிலையில் பேட்டிங்கில் ரோஹித், கோலி சிறப்பான பங்களிப்பை அளிக்கின்றனர். முதல் மூன்று விக்கெட்டுகள் விழுந்தபின் இந்திய அணியின் ரன் ரேட் குறையத் தொடங்கிவிடுகிறது. அதிலும் இறுதி ஓவர்களில் நல்ல பினிஷிங் அமையவில்லை.
இதற்காக அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகிறார் தோனி. பந்துகளை வீணடிக்கிறார். வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் ஆடவில்லை என்று பலவிதமான விமர்சனங்கள் எழுகிறது. ஆனால் கேப்டன் கோலி உட்பட பலரும் அவருக்கு ஆதரவாக பேசிவருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் கடந்த உலகக் கோப்பையை அந்த அணிக்கு பெற்றுக்கொடுத்த கேப்டனுமான மைக்கேல் கிளார்க் தோனிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இது தொடர்பாக இந்தியா டுடே ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “மக்கள் தோனியை சந்தேகிக்கக் கூடாது என்பதை கற்றுக் கொள்ளவில்லை. இதை நான் திரும்பத் திரும்பக் கூறுவேன். நீங்கள் சிறந்த வீரர்களை சந்தேகிக்கக் கூடாது. தோனி சிறந்தவர். தற்போது இந்திய அணி தோனி இல்லாமல் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் தோனியை வீணாக்கி விடாதீர்கள்.
இந்திய அணிக்கு தோனி அவசியம். தேவைப்படும்வரை அவரைப் பாதுகாத்து வையுங்கள். அரையிறுதியிலோ, இறுதிப் போட்டியிலோ அவர் சிறப்பாக விளையாடலாம்” என்று அவர் கூறியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள இந்திய அணி இனி ஆடும் ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியமானது. பந்துவீச்சில் பும்ரா, ஷமி சிறந்து விளங்கும் நிலையில் பேட்டிங்கில் ரோஹித், கோலி சிறப்பான பங்களிப்பை அளிக்கின்றனர். முதல் மூன்று விக்கெட்டுகள் விழுந்தபின் இந்திய அணியின் ரன் ரேட் குறையத் தொடங்கிவிடுகிறது. அதிலும் இறுதி ஓவர்களில் நல்ல பினிஷிங் அமையவில்லை.
இதற்காக அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகிறார் தோனி. பந்துகளை வீணடிக்கிறார். வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் ஆடவில்லை என்று பலவிதமான விமர்சனங்கள் எழுகிறது. ஆனால் கேப்டன் கோலி உட்பட பலரும் அவருக்கு ஆதரவாக பேசிவருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் கடந்த உலகக் கோப்பையை அந்த அணிக்கு பெற்றுக்கொடுத்த கேப்டனுமான மைக்கேல் கிளார்க் தோனிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இது தொடர்பாக இந்தியா டுடே ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “மக்கள் தோனியை சந்தேகிக்கக் கூடாது என்பதை கற்றுக் கொள்ளவில்லை. இதை நான் திரும்பத் திரும்பக் கூறுவேன். நீங்கள் சிறந்த வீரர்களை சந்தேகிக்கக் கூடாது. தோனி சிறந்தவர். தற்போது இந்திய அணி தோனி இல்லாமல் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் தோனியை வீணாக்கி விடாதீர்கள்.
இந்திய அணிக்கு தோனி அவசியம். தேவைப்படும்வரை அவரைப் பாதுகாத்து வையுங்கள். அரையிறுதியிலோ, இறுதிப் போட்டியிலோ அவர் சிறப்பாக விளையாடலாம்” என்று அவர் கூறியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை