வவுனியாவில் புகைரதத்துடன் மோதி உயிாிழந்த வயோதிபா்!!

புகைரதம் மோதி படுகாயமடைந்த நிலையல் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வயோதிபா் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ள நிலையில் குறித்த வயோதிபரை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை கேட்டுள்ளது.


இன்று காலை வவுனியா ஈரப்பெரியகுளம் புகையிரதக் கடவைப் பகுதியில் படுகாயமடைந்து சுய நினைவு இழந்த நிலையில் காணப்பட்ட 60 தொடக்கம் 65வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் காவு வண்டி மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் பற்றிய தகவல்கள் எவையும் தெரியவில்லை. புகையிரதத்தில் பயணித்தபோது கீழே வீழ்ந்து காயமடைந்திருக்கலாம் அல்லது தற்கொலை செய்ய முயற்சித்திருக்கலாம் அல்லது தவறி விழுந்திருக்கலாம் என்று பல்வேறு சந்தேகங்களுடன்

குறித்த வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு விபத்து பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவர் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையுடன் தொடர்பு கொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகத்தினர் கோரியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.