மற்றொரு கடுகதி இன்றுமுதல் சேவையில்!!
இதற்கமைய இரவு நேரத் தபால் ரயில் சேவைகள் புறப்படும் நேரம் மாற்றப்படுவதுடன் மாலை நேர கடுகதி சேவை புதிதாக ஆரம்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய மாற்றம் இன்று தொடக்கம் நடைமுறைக்கு வருகிறது.
காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 5.30 மணிக்கு உத்தரதேவி நகர்சேர் கடுகதியும் அதன்பின் காலை 8.25 மணிக்கு யாழ்.தேவியும் பிற்பகல் 1.15 மணிக்கு குளிரூட்டப்பட்ட அதிசொகுசு நகர்நேர் கடுகதியும் புறப்படும். மேலதிகமாக மாலை 5.45 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து கொழும்புக்கு மற்றுமொரு புதிய ரயில் சேவையும் இடம்பெறவுள்ளது.
அத்துடன் காங்கேசன் துறையிலிருந்து மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் இரவு தபால் ரயில் சேவை பின்னகர்த்தப்பட்டுள்ளது. புதிய அட்டவணையின் பிரகாரம் இரவு தபால் ரயில் சேவை இரவு 7.45 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும்.
அத்துடன், கொழும்பிலிருந்து குளிரூட்டப்பட்ட அதிசொகுசு நகர்நேர் கடுகதி ரயில் அதிகாலை 5.45 மணிக்கும் யாழ்.தேவி காலை 6.35 மணிக்கும் உத்தர தேவி முற்பகல் 11.50 மணிக்கும் புறப்படும். இரவு தபால் சேவை இரவு 9 மணிக்கே புதிய மாற்றத்தின் அடிப்படையில் கொழும்பிலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை