ஊழியர்கள், மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம்!

மன்னார் நகரசபை சுத்திகரிப்புத் தொழிலாளர்கள், சாரதிகள் உள்ளிட்ட மன்னார் நகரசபையின் கீழ் தொழில்புரியும் ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று(வியாழக்கிழமை) காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணி வழங்கும் திட்டத்தில் தாம் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மன்னார் நகரசபையின் கீழ் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் 44 ஊழியர்களுக்குக் காணி வழங்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 15 வருடங்கள் கடந்தபோதிலும் இதுவரை துப்புரவுப் பணியாளர்களுக்கு குறித்த காணிகளுக்கான உறுதிப்பத்திரமோ, வீட்டுத் திட்டமோ வழங்கப்படவில்லை என இதன்போது அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பாக உரிய அதிகாரிகளை சந்திக்க முற்படுகின்றபோதும், தாம் வெளியேற்றப்படுவதாகவும் ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன்காரணமாக தமது நிலையைக் கவனத்தில் கொண்டு தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஊழியர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.