அதிகாலையில் நடந்த விபத்து!!

காலி வீதியில் களுத்துறை வடக்கு வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு காயமடைந்த நிலையில் 52 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தனியார் மற்றும் அரச பேருந்துகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நேருக்குநேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் 3 பெண்களும் 3 ஆண்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த விபத்தில்  காயமடைந்த 52 பேரும் களுத்துறை மற்றும் நாகொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

43 ஆண்கள், எட்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை ஆகியோரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.