நள்ளிரவில் இனந்தெரியாத கும்பல் அட்டகாசம்!!

யாழ்ப்பாணம் – கொக்குவில் பொற்பதி வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத கும்பல் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பொற்பதி வீதியில் முதலாம் ஒழுங்கையில் உள்ள அரச உத்தியோகத்தரின் வீட்டிலேயே இந்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே தாக்குதலை நடத்தியதுடன், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த தளபாடங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தி தப்பிச் சென்றதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை சனசமூக நிலையத்தின் ஜன்னல் கதவுகள் மற்றும் இரும்புக் கதவுகள் என்பன நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சனசமூக நிலையத்தின் தலைவரினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.