பூவின் கர்வமும் பூவையரின் பெருமையும்...!!

மணக்கும்
மல்லிகை
மயங்கியது...



எதனால்...

முள்ளில்
மலர்ந்து
இதழ்
சிரித்த
ரோஜாவும்
நொந்து
போனது...

எதனால்...

கண்ணைப்
பறிக்கும்
கனகாம்பரமும்
கண் கசக்கி
நின்றது...

எதனால்...

செவ்வானம்
கண்டு
பூக்கும்
செவ்வந்தியும்
செத்தொழியத்
துவங்கியது...

எதனால்...

தண்ணீரில்
தவழும்
தாமரையும்
தலை
சாய்த்து
நின்றது...
எதனால்...

சூரியனைக்
கண்டு
மலரும்
சூரிய காந்தியும்
முகம்
சுளுக்கியது...

எதனால்...

சாமத்தில்
பூக்கும்
சாமந்தியும்
சஞ்சலம்
கொண்டது...

எதனால்...

இப்பூவுலகில்
பூக்களெல்லாம்
தான் தான்
அழகென்று
நினைத்துக்
கர்வம்
கொண்டிருக்கும்
வேளையில்.....

பூவிலும்
மென்மையான
"பூவையர்"
தோன்ற
இம்மாற்றங்களெல்லாம்
நிகழ்ந்தன.....

சிவாஜி சீனு
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.