ஜனாதிபதி மைத்திரி நாடு திரும்பினார்!

கம்போடியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார்.


அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாட்கள் பயணமாக புதன்கிழமை கம்போடியாவுக்கு விஜயம் செய்திருந்தார்.

கம்போடிய மன்னர் நொரொடோம் சிகாமணியின் அழைப்பின் பேரில் நொம்பென்னுக்கு விஜயம் செய்த ஜனாதிபதிக்கு மன்னரின் அரச மாளிகையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. அத்தோடு ஜனாதிபதியின் ஒளிப்படங்களுடனான பதாதைகளும் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அதன் பின்னர் கம்போடிய பிரதமர் ஹூன் சென்னுடன் இருதரப்பு பேச்சுக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடத்தியிருந்தார்.

மேலும் ஜனாதிபதியின் இந்த பயணத்தின்போது அவர், அங்கோர் புராதன பூங்காவில் உள்ள பௌத்த ஆலயங்களுக்கும் விஜயம் செய்திருந்ததோடு, வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.