வாக்குறுதி வழங்கிய கோட்டாபாய!!

நாட்டில் ஒரு போதும் அடிப்படைவாதத்துக்கும், பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டம் இன்று மாலை கொழும்பு சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன் எமது நாட்டில் பல்வேறு இனங்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர் , இங்கு பல்வேறு மதங்களை பின்பற்றுவோர் உள்ள நிலையில், நாம் எப்போதும் மற்றவர்களுடைய சமயங்களுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்றும், எமது சக்தியும் இந்த ஒற்றுமையிலேயே தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த தாய் நாட்டில் பிறந்த எந்தவொருவருக்கும் அச்சம், பயம் இன்றி வாழக்கூடிய பாதுகாப்பான சூழலொன்றை மீண்டும் கட்டியெழுப்புவேன் எனவும் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.