பாழடைந்த வீட்டில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!!

மட்டக்களப்பு – ஓட்டமாவடி கொண்டையன்கேணி பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றிலிருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


குறித்த பெண்ணின் சடலம் நேற்று (சனிக்கிழமை) இரவு கண்டெடுக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுரியா மீனவர் சங்க வீதியைச் சேர்ந்த 52 வயதுடைய உசனார் ராஹிலா என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சம்பவதினமான நேற்று இரவு காணாமல்போன நிலையில், தலையில் தாக்கப்பட்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த பெண்ணின் மருமகன் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.