இலங்கைக்கு போதை பொருள் கடத்திய இந்திய பெண் கைது!!

ஒருதொகை போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பிற்கு வருகை தந்த 37 வயதான இந்தியப் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடமிருந்து 18 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1.25 கிலோ கிராம் கொக்கைய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபரை பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கப்பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.