லாவோஸில் சுற்றுலா பேருந்து விபத்து!

லாவோஸில் சுற்றுலா பயணிகள் பயணித்த பேருந்து ஒன்று குடைசாய்ந்ததில் சீனாவை சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர்.


சீனாவின் எல்லையோரம் அமைந்துள்ள லாவோஸின் வடக்கு பகுதியில் உள்ள லுவாங் பிரபாங் நகரில் இருந்து தலைநகர் வியன்டியன் நோக்கி குறித்த பேருந்து சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்தில் லாவோஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த சீனர்கள் 43 பேர் மற்றும் சுற்றுலா வழிகாட்டி உள்பட மொத்தமாக 46 பேர் பயணித்தனர்.

லுவாங் பிரபாங் நகரின் மலைப்பாங்கான பகுதியை பேருந்து கடந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த 31 பேரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மலைப்பாங்கான பகுதியில் பயணித்தபோது பேருந்தின் தடையி முறையாக செயற்படாததே இந்த விபத்து நிகழ காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.