என் பயணம் -கவிதை!!

பயணங்களைத் தொடரமுடியாதபடி
பாதைகளை அடைத்து வைத்திருக்கிறார்கள்..
உடைத்து எறியமுடியாத வேலிகளும்
அவிழ்க்க முடியாத கட்டுக்களும்
சுற்றிக்கிடக்கின்றன !


கண்ணின் நீர் வழியாதபடி
இமைகள் இறுக்கம் கொள்ளும்
வித்தையினை
இங்குதான் கற்றுக்கொண்டேன் !

வேப்ப மரத்துப் பட்டைகளை
சுவைப்பதைப்போல்
என் நாட்கள் நகர்கின்றன...
பாறைகளின் இடுக்குகளில்
ஔிந்திருக்கும் இருள் போல்
மனம் கனக்கின்றது !

எனக்கான தேவைகளை புறக்கணித்து
பிறர் வாழ்தலில் தான்
என்னை நான் சந்திக்கின்றேன் !

தமிழும் மொழியும் எனும்
நேர்கோட்டில் தான் பயணிக்கிறேன்
எதற்கெனவும் எதுவுமில்லை
அவரவர் உலகை மீட்டுத்தரும்படி
இறைவனிடம் மன்றாடுகின்றேன் !

அன்பழகி கஜேந்திரா
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.