போர்க் குற்றச்சாட்டுக்களில் ஐ.நா. தலையிட முடியாது – சரத் வீரசேகர!!

உள்நாட்டு போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு மனித உரிமைச் சட்டங்களைப் பிரயோகிக்க முடியாதென முன்னாள் பிரதியமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றச்சாட்டுக்களில் வெளிநாடுகள் தலையிடுகின்றமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த மூன்று தசாப்த காலமாக நாட்டிற்குள் இராணுவத்திற்கும், தனிநாடு கோரிய தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்திற்கும் இடையில் போரொன்று இடம்பெற்றதே தவிர, அது சர்வதேச மட்டத்திலான ஆயுதப் போரல்ல.

ஆகவே இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச நாடுகளோ தலையிட முடியாது.

அத்துடன் இது உள்நாட்டு ஆயுதப்போர் என்பதால் இதனை மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாக மாத்திரம் அணுக முடியும்.

ஆனால் மனித உரிமைச் சட்டங்களை ஒருபோதும் பிரயோகிக்க முடியாது.

இதேவேளை நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்துக்களை வெளியிடுவதனை ஒருப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.