தேயிலைக்குள் ஆபத்தான பொடி கலப்படம் செய்தவர்கள் கைது!

தேயிலைக்குள் ஆபத்தான இரசாயன திரவம் மற்றும் பொடியை கலந்து கொண்டிருந்த 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தெரனியகலை - சப்புமல்கந்த பகுதியிலேயே இவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளா் ருவாண் குணசேகர கூறியுள்ளாா்.

இலங்கை தேயிலைச் சபை அதிகாரிகளும், வலானை ஊழல் ஒழிப்பு பிரிவினரும் இணைந்து, குறித்த தேயிலை உற்பத்தி தொழிற்சாலையை சோதனைக்கு உட்படுத்தியபோது, குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, தேயிலையில் கலப்படம் செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 25 கிலோகிராம் வெள்ளை நிறத் தூள் அடங்கிய 42 பொதிகள் அதிகரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் , அடையாளம் காணப்படாத 130 லீற்றர் திரவம் அடங்கிய கொள்கலன் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளா் ருவாண் குணசேகர தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.