போதைப்பொருளுடன் 8பேர் கைது!!

இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் போதைப்பொருட்களுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பொலிஸ் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையால் நேற்று (சனிக்கிழமை) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் பங்கேற்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஐஸ், ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை வைத்திருந்த 5 இளைஞர்களும் மூன்று யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இரத்தினபுரியை சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 795 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 354 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 4 ஆயிரத்து 540 மில்லி கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.