தொடரும் அருவக்காட்டு பிரச்சினை!!

புத்தளம், அருவக்காட்டுக்கு கொழும்பில் இருந்து குப்பைகளைக் கொண்டுசென்ற டிப்பர் வாகனம் மீதும் அதற்கு பாதிகாப்பாகச் சென்ற பொலிஸ் ஜீப் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் தில்லையடிப் பகுதியில் மறைந்திருந்த சிலர் குறித்த தாக்குதலை நடாத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் இந்த தாக்குதலால் இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான நபர் புத்தளம் நீதிவான் முன்னலையில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு குப்பைகளைக் கொண்டு சென்ற டிப்பர்கள் மீது மூன்றாவது தடவையாக இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.