க.பொ.த. உயர்தர விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முதற்கட்ட விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.


அதற்கமைய குறித்த பணிகள் இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளன.

28 பாடங்களுக்கான விடைத்தாள்கள் இதன்போது திருத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.

விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக 12 பாடசாலைகள் முற்றுமுழுதாக மூடப்படுவதுடன், 26 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்றாக மூடப்படும் பாடசாலைகள் அடுத்த தவணைக்காக எதிர்வரும் 16ஆம் திகதி திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் மூன்று கட்டங்களாக இடம்பெறும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தடவை கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில்,  3,37704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.