யாழிலும் நிலஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம்!!

யாழ்ப்பாணத்தில்  பாதுகாப்பு படையினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் நிலங்களை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று (புதன்கிழமை) நடைபெற்ற இந்தப் போராட்டத்தை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.

கடந்த 30 வருட காலமாக வடக்கு பகுதியில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் மக்களுடைய காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.

மேலும் அப்பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் தற்போது அடாத்தாக காணிகள் அழிக்கப்பட்டு வருவதை நிறுத்த கோரியும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் இறுதியில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரத்திடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் வலி.வடக்கு மீள்குடியேற்ற மக்கள் மற்றும் பருத்தித்துறை பிரஜைகள் குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.