வவுனியாவில் வெடிபொருட்கள் உள்ள இடத்தை அகழ்வதற்கு நடவடிக்கை!

வவுனியா கோவில் புதுக்குளம் பகுதியில் உள்ள குளக்கரையை அண்மித்த பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்நிலையில் வெடிபொருட்கள் காணப்பட்ட இடத்தை அகழ்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை குளக்கட்டு வேலையில் ஈடுபட்டிருந்த மக்கள், அங்கு சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார்,  அந்த பகுதியை சோதனை செய்தபோது, டெட்டனேற்றர் குச்சி 2 மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 100மீற்றர் வயர் ரோல் என்பவை மண்ணில் புதையுண்டிருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த இடத்தில் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த பகுதியை அகழ்ந்து சோதனைகளை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.