ஜனாதிபதி மைத்திரிபால பருத்தித்துறை துறைமுகத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்!!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் புனரமைப்பு பணிகளை முன்னெடுப்பதற்கான அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.


13,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த அபிவிருத்தி பணி முன்னெடுக்கப்படுகிறது.

அந்தவகையில், இந்த திட்டத்தின் பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்துள்ளதோடு, பெயர் பலகையையும் திரைநீக்கம் செய்துள்ளார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.